ரயில் போல் அரசு பேருந்திலும் முதியோருக்கு சலுகை கட்டணம் கரூர் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், ஜூலை 24: ரயிலில் வழங்கப்படுவது போல அரசு பேருந்துகளிலும் முதியோருக்கு சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளை கூட்டம் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. முத்துசாமி, பாஸ்கரன், கருப்பன், சிவசங்கரன், வீரமணி, கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.கூட்டத்தில் தமிழக அரசு ஒருநபர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த நாட்களில் இறந்திருந்தாலும் அந்த மாதத்திற்கு உரிய முழு ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகமும், ரயில்வேயில் வழங்கப்படுவதைப்போல முதியோர் சலுகைக் கட்டணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: