பிளஸ்1, பிளஸ்2 தேர்வெழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலை இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1 அரியர்) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (24ம் தேதி) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling / Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்றி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களை எடுத்து நாளை (25ம் தேதி) காலை 10 மணி முதல் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி இணை இயக்குநர் அலுவலகத்தின் தேர்வுப்பிரிவில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை இணை இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 என செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: