கிருஷ்ணா நகரில் பெண் தற்கொலை

புதுச்சேரி,  ஜூலை 24:  புதுவை, கிருஷ்ணா நகர், 9வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர்  தனபால். இவரது மனைவி ராணி (59). டீக்கடை நடத்திய தனபால் வயது முதிர்வு  காரணமாக வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் குடும்பத்தில்  வறுமை அதிகமாகி தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உறவினர்கள் யாரும் ராணிக்கு ஆறுதல் கூற இல்லாததால் மனவருத்தத்தில்  இருந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் ராணி வீட்டில் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

Related Stories: