இரு குழந்தைகளும் மனநலம் பாதிப்பு ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சாவு

ஆலங்குளம் ஜூலை 24: ஆலங்குளம் அருகே அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவரது மனைவி பால்தாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அண்ணாமலை தற்போது மானூர் அருகே ரஸ்தாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அண்ணாமலை மனசோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் அய்யனார்குளத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். குடிபோதையில் வந்த அவர் அங்கு இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து இறந்தார். அதிகாலை ஆகியும் கணவர் வீடு திரும்பாததால் அவரை தேடி பால்தாய் அய்யனார்குளம் வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசிற்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: