நெல்லை,ஜூலை 24: வாசுதேவ நல்லூர் எஸ்ஐ சண்முகவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்குபுரம் பகுதியில் சிர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது ராமர், கிருஷ்ணமூர்த்தி, பெரியகுருசாமி மற்றும் முருகன் ஆகியோர் அப்பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடினர். இதைதொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.