3 மாதமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை

நெல்லை, ஜூலை 24:  வி.கே.புரம் நகராட்சி பசுக்கிடைவிளை பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அருணாச்சலபுரம் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தோம். அங்கு 1600 ரேஷன் கார்டுகள் இருந்ததால் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் நாங்கள் ஊரில் இருந்து இடம் ஒதுக்கி கொடுத்து தனிக்கடை கேட்டோம்.

அதன்படி 3 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தரப்பட்டது. அக்கடையில் மாதம் ஒருநாள் மட்டுமே பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்தனர். கடந்த 3 மாதமாக ரேஷன் ெபாருட்களே வழங்கப்படவில்லை. நாங்கள் மண்ணெண்ணெய் இதுநாள் வரை ரேஷன் கடையில் வாங்கியதில்லை. எனவே எங்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: