தூத்துக்குடி, ஜூலை 24: போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா நடந்தது. தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 15வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் பச்சை நிற பிரிவு மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு கேரம் போர்டு ஆம் கன்ட்ரோலின் பொதுச் செயலாளர் சொக்கலிங்கம் பாலாஜி தலைமை வகித்து, வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளிச் செயலாளர் ஜீவன்ஜேக்கப் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜெஸிந்தா நன்றி கூறினார்.