மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடியில் மனைவியை மிரட்டிய தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர்.

 தூத்துக்குடி   வள்ளிநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). தூத்துக்குடி அனல்மின்   நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், மனைவி முத்தரசி (25) என்பவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்படுவது வழக்கம்.தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட   தகராறின் போது ராம்குமார், முத்தரசிக்கு கொலை மிரட்டல்   விடுத்துள்ளார். புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ ஞானராஜ் வழக்குப்பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.

Related Stories: