தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சிவகுமார் (18). டூவீலர்   ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஆண்டு குற்ற வழக்கு   தொடர்பாக கொடுத்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து   தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரிதங்கம் (19) உள்ளிட்ட சிலரை கைது   செய்துள்ளனர்.  இதனால் மாரிதங்கம் உள்ளிட்டோர் சிவ

குமாருடன்   முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி பாரதி நகரில்   வந்துகொண்டிருந்த சிவகுமாரை மாரிதங்கம் மற்றும் 3 பேர் சேர்ந்து  மறித்து தகராறு செய்ததோடு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்   விடுத்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சிவகுமார் சிகிச்சைக்காக   தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசார் மாரிதங்கம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: