சென்னை: சாக்லெட் கொடுத்து சிறுவனிடம் சில்மிஷம் செய்த ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாமந்தி பிளவர் காலனியை சேர்ந்தவர் சாரங்கபாணி(42). இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது வீட்டின் அருகே இருந்த 7 வயது சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனை தனியாக அழைத்து சென்று, ஆசையாக பேசி, தவறாக நடந்தும், சிறுவனையும் தவறாக செய்ய வைத்துள்ளார். மேலும் இது குறித்து வீட்டிலோ, வெளி நபர்களிடமோ கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.ஆனால், இது குறித்து சிறுவனின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சென்னை, எம்.கே.பி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார், சாரங்கபாணியை பிடித்து விசாரணை நடத்தினர்.