வாணியம்பாடி, ஜூலை 24: வாணியம்பாடியில் பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ரேஷன் கடை (எண்.2) இயங்கி வருகிறது. இந்த கடையை குறிப்பிட்ட நேரத்தில் திறப்பதில்லையாம். மேலும் ரேஷன் பொருட்களையும் சரிவர வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்டால், ‘அரிசி, சர்க்கரை, பருப்பு எதுவுமே இன்னும் வரவில்லை. வந்தால்தான் தருவோம்’ எனக்கூறி பொதுமக்களை அலைக்கழித்து வருகிறாராம். இதுதொடர்பாக கற்பகம் கூட்டுறவு கடை மேலாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தபோதும் அவரும், ‘நாங்கள் எதுவும் செய்யமுடியாது, பொருட்கள் வந்தால்தானே தரமுடியும்’ எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.