வேலூர், ஜூலை 24: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. செயல்பாடுகளில் சந்திரபாபுவை மிஞ்சியவராக ஜெகன் மோகன் இருக்கிறார். பாலாற்றில் ஒரு சொட்டு தண்ணீர் விடமாட்டோம் என்ற வைராக்கியத்தோடு தான், ஆட்சிகள் மாறினாலும் முதல்வர்கள் தங்கள் கொள்கையில் மாறவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அண்டை மாநில முதல்வர்கள் மிக கவனமாக உள்ளார்கள். எல்லா பக்கமும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இந்த முட்டுக்கட்டையை உடைக்க தெரியாமல் எடப்பாடி அரசு அமர்ந்துள்ளது.