சோளிங்கர் அருகே பயங்கரம் லாரி டிரைவர் தலை துண்டித்து கொலை செய்து சடலம் கிணற்றில் வீச்சு

சோளிங்கர், ஜூலை 24: சோளிங்கர் அருகே லாரி டிரைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தைலந்தோப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தலை துண்டித்த நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக கொண்டபாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்த வாலிபர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(23), லாரி டிரைவர் எனவும், திருமணமாகாதவர் எனவும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: