ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

திருக்கழுக்குன்றம், ஜூலை 24: திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியத்தை, பணி ஓய்வு பெறும் நாளில் (31.05.2019) அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், அவருக்கு மீண்டும் முறையான  பணி ஓய்வு ஆணை வழங்க கோரியும் போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பரணி தலைமை தாங்கினார்.      மாவட்ட இணை செயலாளர் கன்னியப்பன், திருக்கழுக்குன்றம் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, வட்டார தலைவர் ரகுராமன், செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: