நீர்மேலாண்மைக்கான விழிப்புணர்வு பேரணி

தேனி, ஜூலை 23: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நீர்மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த பேரணியை பள்ளியின் செயலாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் இணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர்.  பள்ளியின் பசுமைப்படை, இளஞ்செஞ்சிலுவைச் சங்கம், சாரண, சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பள்ளியில் இருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனருடன் சென்றனர்.

Related Stories: