தேனியில் விழிப்புணர்வு பேரணி

தேனி, ஜூலை 23: தேனியில் கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நீர்மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரணியை பள்ளியின் செயலாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர்.பள்ளியின் பசுமைப்படை, இளஞ்செஞ்சிலுவை சங்கம், சாரண, சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பள்ளியில் இருந்து கிளம்பிய ஊர்வலம் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர்.

 

Related Stories: