இரும்புக்கம்பிகள் 500 கிலோ திருட்டு

தேனி, ஜூலை 23: தேனியில் ரயில்வே பாலம் கட்டுவதற்காக வைத்திருந்த 500 கிலோ எடையுள்ள இரும்புக்கம்பிகள் திருடுபோனது.தேனி நகர் மதுரை சாலையில் மேரிமாதா பள்ளி அருகே ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பாலம் கட்டுவதற்காக வைத்திருந்த 500 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதனை கட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக சங்கர்தயாள்சர்மா(23) பணிபுரிந்து வருகிறார். திருட்டு குறித்து அவர் தேனி போலீசில் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: