தேனி அருகே விவசாயத்தில் நஷ்டம் இளம்பெண் தற்கொலை

தேனி, ஜூலை 23: தேனி அருகே வீரபாண்டியில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்த இளம்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தேனி அருகே வீரபாண்டி காலேஜ்ரோட்டில் வசிக்கும் விவசாயி பிரகாஷ் மனைவி ரமீலா(27). இவர்களுக்கு  திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு விவசாயத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் கடனில் சிக்கியது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறும், கருத்து வேறுபாடும் உருவானது. இதனால் மனமுடைந்த ரமீலா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குமாட்டி கொண்டார். இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கவனித்து விட்டனர். உடனடியாக ரமீலாவை கயிற்றின் பிடியில் இருந்து மீட்டு, வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ரமீலா பரிதபமாக இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: