இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம்

மார்த்தாண்டம், ஜூலை 23: மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி கரும்பாற சுண்டவிளை பகுதியை சேர்ந்தவர் சைலஸ்ராஜன்(47). அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். திக்குறிச்சி பரியம்புறத்துவிளையை சேர்ந்தவர் விஜயகுமார்(55). ைசலஸ்ராஜனின் செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயந்திரத்தில் சிக்கி விஜயகுமாரின் வலது கை சேதமடைந்தது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மனைவி சுசீலா(53) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: