ேகாட்டாறு மறை மாவட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு திருவிழா

நாகர்கோவில், ஜூலை 23: கோட்டாறு மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அலுவலகம், மறை மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களும் இணைந்து மறை மாவட்ட பள்ளிகளின் விளையாட்டு திருவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடத்தினர். தொடக்க விழா நிகழ்வில் மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் வரவேற்றார். கோட்டாறு  மறை மாவட்ட பிஷப் நசரேன் சூசை தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் மறை மாவட்ட கொடியேற்றினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஒலிம்பிக் கொடியேற்றினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். உடற்கல்வி ஆசிரியர் கலா நன்றி கூறினார். இதில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 48 பள்ளிகளை சேர்ந்த 950 மாணவ மாணவியர் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிகள் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து நிறைவு விழா நடைபெற்றது.

Related Stories: