குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

பேரையூர், ஜூலை 23: எழுமலை அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியலால் எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது சூலப்புரம் ஊராட்சி. இங்குள்ள உலைப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.வறட்சி காரணமாக கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அருகிலுள்ள தோட்டங்கள், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மல்லப்புரம் விலக்கு சென்று மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலையில் டி.ராமநாதபுரம் விலக்கில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். எம்.கல்லுப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பொதுமக்களின் இந்த திடீர் மறியலால் எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலையில் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: