விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வாடிப்பட்டி, ஜூலை 23: வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளையொட்டி குழந்தைகள் வன்கொடுமை குறித்த வழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் நாகேஷ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலெட்சுமி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் சரவணன் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.ஆய்த சிறகுகள் அமைப்பு சார்பாக சரத்குமார், ஆரோன், கீர்த்தனா ஆகியோர் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தினர். இதில் திரளான மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: