மக்கள் தொடர்பு முகாமில் மனு அளிக்க வாய்ப்பு

சாயல்குடி, ஜூலை 23: கடலாடி அருகே பனிவாசல் கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்க இருப்பதால். பொதுமக்கள் மனு அளிக்கலாம் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடலாடி தாசில்தார் முத்துக்குமார் கூறும்போது, நாளை 24ம் தேதி சிக்கல் உள்வட்டம், பனிவாசல் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமையில் நடக்க இருக்கிறது, இதில் பனிவாசல் வருவாய் கிராமம், அருகிலுள்ள பேய்க்குளம், மறவாய்குடி, வல்லக்குளம் உள்ளிட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு அரசு உதவிகள் கேட்டு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் மாதாந்திர உதவி தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்களிடமிருந்து 51 பல்வேறு கோரிக்கை முன் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: