சொத்து பிரச்னை அடிதடியில் 9 பேர் காயம்

ராமநாதபுரம், ஜூலை 23: ராமநாதபுரம் அருகே ஏ.பனையூர் கிராமத்தில் சொத்து பிரச்னை காரணமாக இரு குடும்பத்தினருக்குள் நேற்று முன்தினம் இரவு அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் அறிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் அக்கிராமத்தை சேர்ந்த வடிவேல், அவரது மனைவி கவிதா, உறவினர்கள் முருகானந்தம், கிருஷ்ணன், மற்றொரு தரப்பினர் கரிகாலன், அவரது மனைவி சண்முகவள்ளி, மகன் காமேஷ்கண்ணன், உறவினர்கள் ரவி, கதிரேசன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த வெட்டு ஏற்பட்டுள்ள கரிகாலன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நயினார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: