படகுகளை பழுது நீக்க அரசு மானியம் எம்பியிடம் திமுக, காங். மனு

மண்டபம், ஜூலை 23: தமிழக படகுகளை பழுது நீக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வலியுறுத்திராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியிடம் மண்டபம் திமுக., காங்கிரஸ் நிர்வாகிகள்  மனு அளித்தனர்.

மண்டபம் ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆய்வு செய்தார். இது தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஆலோசனைகள் கேட்டறிந்தார். அப்போது நவாஸ்கனி எம்பி.யிடம் நகர் திமுக செயலாளர் ராஜா, வட்டார காங். தலைவர் விஜயரூபன், நகர் தலைவர் ராமராஜ், செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஷாஜகான் ஆகியோர் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில்,

மண்டபம் ரயில் நிலைய நடைமேடை உயரத்தை வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் நிலைய நடைமேடையை அகலப்படுத்த வேண்டும். தொலைதூரம், வடமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள். இயற்கை இடர்பாடுகளின் போது, பயணிகளின் நலன் கருதி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதால் இங்கு ஜங்ஷன் ஏற்படுத்த வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கு  மண்டபத்தில் நிரந்தர நிறுத்தம் அமைக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். 60 வயது கடந்த மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும். இதர மாநிலங்களில் வழங்கப்படுவது போல், பழுதான படகுகளை சீரமைக்க மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: