முதியவர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம், ஜூலை 23:  எஸ்.பி.பட்டிணம் அருகே தெற்கு ஆண்டாள் ஊரணியை சேர்ந்த விவசாயி கருப்பையா (65). இவரது மகன் ராஜ்குமார் வெளிநாட்டில் உள்ளார். இவரது வீட்டிற்கு அருகே  மருது உடையார் மகன் ரவிச்சந்திரன்(45) வசித்து வருகிறார். இருவர் வீட்டின் நடுவே கருப்பையா வீட்டின் கழிப்பறை உள்ளது. இதனால் அடிக்கடி இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 7.3.2015 கருப்பையாவை ரவிச்சந்திரன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கருப்பையா இறந்து விட்டார். ரேவதி கொடுத்த புகாரின் பேரில், எஸ்.பி.பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரவிச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

Related Stories: