பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 23: ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலத்தில் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் தாசில்தார் சாந்தி தலைமையேற்று விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மெய்மொழி, தலைமை ஆசிரியர் விமலி வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் இருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சேதுபதி பேருந்து நிலையம் வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பாலிதீன் பற்றிய விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories: