ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின் இணைப்பு இல்லாத மீன்கள் இறங்கு தளம் அவதிப்படும் மீனவர்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 23: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை கிராமத்தில் மீன்வளத் துறை சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தில் மின் இணைப்பு இல்லாமல் இரவு நேரங்களில் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடன மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள மோர்பண்ணை கிராமம் முற்றிலும் மீனவர்கள் மட்டுமே வசிக்கும் மீனவ கிராமம் ஆகும். இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடற்கரை ஓரமாக மீன்வளத் துறையின் சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இறங்கு தளத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்பி தாங்கள் பிடித்த மீன்கள் மற்றும் வலைகளை பிரிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் மின் இணைப்பு இல்லாமல் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் கடும் இருட்டில் மீனவர்கள் எந்த பணியும் செய்ய முடியவில்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் வயரிங் வேலைகளெல்லாம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்பு மட்டும் கொடுக்காமல் வருட கணக்கில் காட்சி பொருளாக உள்ளது. இதனால் மின் வெளிச்சமின்றி மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராமத் தலைவர் பாலன் கூறுகையில், எங்கள் கிராமத்தின் சார்பாக பல முறை மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. ஆகையால் நாங்களே கிராமத்தின் சார்பாக மின் இனைப்புக்கு பணம் செலுத்தியுள்ளோம். தற்போதாவது மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: