தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

திருப்பூர், ஜூலை 23: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அகில இந்திய அளவில் வலுவான எலும்புகள் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் இந்திய மற்றும் தமிழ்நாடு எலும்பியல் சங்க மருத்துவர்களால் நலிவுற்ற நபர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகிறது. இதற்காக நோயாளிகள் தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 29ம் தேதி துவங்கும் இலவச மருத்துவ முகாம்கள் இந்திய மற்றும் தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர்கள் சங்க உறுப்பினர்களின் கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. எலும்பு மற்றும் மூட்டு நலன் அத்தியாவசியமானது என்பதுகுறித்து விளக்கம் ஏற்படுத்தும் விதமாக  பொதுமக்கள், மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், துண்டு பிரசுரங்கள், கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

Related Stories: