சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர், ஜூலை 23:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அல்லி உத்தரவின் பேரில் சர்வதேச நீதி நாளை ஒட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஸ்ரீவித்யா தலமை வகித்துப் பேசியதாவது: சர்வதேச நீதி நாள் குறித்து இன்றைய தலைமுறையினர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் சட்டம் பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும். மேலும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், பட்டியல் வழக்குரைஞர் கணபதி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: