ரயில் மோதி பெண் பலி

ஈரோடு, ஜூலை 23: ஈரோடு அடுத்த தொட்டிபாளையம் - பெருந்துறை ரயில் பாதையில் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். அவர் யாரென தெரியவில்லை. இறந்த பெண்ணிற்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: