தாரமங்கலத்தில் கருணாநிதி முழு உருவ சிலைக்கு 8 அடி உயரத்தில் பீடம் தயார்

தாரமங்கலம் ஜூலை 23:  தாரமங்கலம் தேர்நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலை வைக்கும் பீடமானது புதுக்கோட்டை சிற்பி கருப்பையாவால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரே கல்கொண்டு செய்யப்பட்ட 8 அடி உயரம் கொண்ட அடி பீடம் கிரேன் மூலம் நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையானது 8 அடி உயரம் கொண்டதாகும். இதனை சென்னை மீன்சூர் சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். சிலை திறப்பு விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும் என திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தெரிவித்தார்.

Related Stories: