திருச்செங்கோடு அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது

திருச்செங்கோடு, ஜூலை 23: திருச்செங்கோடு அருகே டூவீலரில் சென்றவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் கிழக்கு தோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் பார்மசிஸ்ட் ஆக இருந்து வருகிறார். இவர் நேற்று பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் இருந்து வீட்டிற்கு, தனது டூவீலரில் சென்றார். அப்போது கீழேரிபட்டி என்ற இடத்தில் அவரை வழிமறித்த இருவர், கத்தியை  கட்டி மிரட்டி, ரவிச்சந்திரன் பாக்கெட்டில் வைத்திருந்த ₹220 ஐ பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து ரவிச்சந்திரன், திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட வெள்ளாளப்பட்டி  அருந்ததியர் தெருவை சேர்ந்த சகோதரர்களான கூலித்தொழில் செய்து வரும் பிரபு (34), முருகேசன் (40) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சௌம்யா மேத்யூ, அவர்களை 15 நாள் காவலில் வைக்க  உத்தரவிட்டார்.

Related Stories: