உளுந்தூர்பேட்டை, ஜூலை 23: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. சிவப்பு கலர் சட்டையும், பேன்டும் அணிந்து இருந்தார். கடந்த இரண்டு நாட்களாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய பகுதியில் ரோஜாப்பூ விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. குடிபோதையில் சுற்றி வந்த வாலிபர் நேற்று பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நிழற்குடையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து நிலையம் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாலிபர் சடலம் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.