பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேருக்கு வலை

பதுச்சேரி, ஜூலை 23:  விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, கீழ்கூத்தப்பாக்கம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கோபு (31). புதுவை, தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரே வாகனத்தில் பெட்ரோல் போட்டு விட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அதற்கான குறுஞ்செய்தி வராததால் சந்தேகமடைந்த கோபு அவர்களிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அவர்களும் பணத்தை கொடுத்துவிட்டு சென்ற நிலையில், சிறிதுநேரத்தில் அந்த நபர்களுக்கு பணம் எடுக்கப்பட்டதற்கான குறுந்தகவல் வந்துள்ளது.  இதையடுத்து மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 பேரும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கியதோடு, கோபுவிடம் இதுகுறித்து கேட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 2 பேரும் கோபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிஓடிவிட்டனர். கோரிமேடு போலீசில் கோபு அளித்த புகாரின் பேரில், எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து அடையாளம் தெரியாத 2 நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: