வேலூர், ஜூலை 23: ராணிப்பேட்டை, ஆம்பூரில் கார் மற்றும் மினி வேனில் கொண்டு சென்ற ₹3.56 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பை பாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாலாஜாவில் இருந்து ஆற்காடு நோக்கி வேகமாக வந்த காரில் சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி ₹2.50 லட்சம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.