சாத்தான்குளம், ஜூலை 23: சாத்தான்குளம் உடையார்குளம் தூர்வாரும் பணியை திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்பிரியா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தாமிரபரணி வடிநில கோட்டம் சார்பில்வைகுண்டம், சாத்தான்குளம் பகுதியிலுள்ள 12 குளங்களில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதன்படி சாத்தான்குளம் தாலுகா உடையார்குளம் ரூ29.60 லட்சம் மதிப்பீட்டிலும் அமுதுண்ணாக்குடி குளம் ரூ42.50 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்களின் ஆயக்கட்டுபாட்டிற்கு உட்பட்ட விவசாய பாசனதாரர்கள் மூலமாக விவசாய பாசனதாரர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் பணிகள் நடந்துவரும் நிலையில் திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்பிரியா பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரமேஷ்குமார், விஏஓ செந்தில்முருகன், விவசாய பிரதிநிதிகள் உடனிருந்தனர். ஆய்வு நடத்தினார்.