அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நுகர்பொருள் கொள்முதல் செய்ய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, ஜூலை 23: தஞ்சை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுககு நுகர்பொருட்கள் கொள்முதல் செய்ய தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2019-2021ம் ஆண்டில் நுகர்பொருள் கொள்முதல் செய்வது தொடர்பாக தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தரமான பொருட்களை நியாயமான விலையில் காலதாமதமின்றி வழங்கும் விருப்பமுள்ள நிறுவனங்கள், அதற்கான விண்ணப்பத்தை அரசு தொழிற்பயிற்சி நிலையம். தஞ்சை என பூர்த்தி செய்து வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். தகுதியுள்ள நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலித்து இத்துறை அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்கள் பட்டியலில் சேர்க்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு துணை இயக்குனர் மற்றும் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் என்ற முகவரியை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரமான பொருட்களை நியாயமான விலையில் காலதாமதமின்றி வழங்கும் விருப்பமுள்ள நிறுவனங்கள், அதற்கான விண்ணப்பத்தை அரசு தொழிற்பயிற்சி நிலையம். தஞ்சை என பூர்த்தி செய்து வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

Related Stories: