தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 6வது ஊதிய ஒப்பந்தப்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

தஞ்சை, ஜூலை 23: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2019-20ம் ஆண்டிற்கான வருடாந்திர நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுவரை இதில் கலந்து கொள்ளாத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உடனடியாக அந்தந்த வட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தொடர்புடைய மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் தங்களது வருடாந்திர நேர்காணலை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் தங்களது வாழ்நாள் சான்றை தொடர்புடைய மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்களுக்கு உரிய படிவத்தில் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஜீவன் பிரமான் மூலம் தங்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையம் வாயிலாகவும் தங்களது நேர்காணலை பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தவறும் பட்சத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என மாவட்ட கருவூல அலுவலக செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: