ஆயக்காரன்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம், ஜூலை 23: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் சார்பில் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் முகாம் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன் முகாமை தொடங்கி வைத்தார். ஆரிமா சங்கத் தலைவர் சோழநம்பி, செயலர் ராம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் சம்பத், ராமஜெயம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் 380 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 125 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி

வைக்கப்பட்டனர்.

Related Stories: