20ம் ேததி பேர்ணாம்பட்டில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், ஜூலை19:  திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:  வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும்வண்ணம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 20 ந் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பேர்ணாம்பட்டு (மீன்மார்க்கெட் அருகில்) உள்ள தேர்தல் பணிமணையில் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற உள்ளது. பேர்ணாம்பட்டு நகர செயலாளர் ஆலியார் ஜுபேர் அஹமத் வரவேற்கிறார்.இந்த கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார். இதில் எம்எல்ஏ க்கள் ஆ.கிருஷ்ணசாமி,  எஸ்.காத்தவராயன்,  வி.ஜி.ராஜேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள்  இ.பரந்தாமன்,  சி.ஜெரால்டு,  ஆர்.டி.இ.ஆதிசேஷன்,  கே.திராவிடபக்தன், நடுகுத்தகை ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  எனவே இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

Related Stories: