திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயில் ஆனி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கையாக ₹98 லட்சம் பக்தர்கள் செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலைரை தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதன்படி இந்த மாத(ஆனி) பவுர்ணமி கடந்த 16ம் தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள்(17ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி இரவு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.