சின்னசாமியம்மாள் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் கௌரி துர்கா கேஸ் சர்வீஸ் மற்றும் பாரத் கேஸ் சார்பில் தூய்மை இந்தியா வாரத்தினை முன்னிட்டு கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி நடந்தது. நிறுவன ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகம், கழிவறை ஆகியவற்றை சுத்தம் செய்தனர். பின்பு சுத்தமாக இந்தியாவை வைத்துக்கொள்ளும் உறுதிமொழியை பள்ளி தலைமை ஆசிரியர் துரை மற்றும் கௌரி துர்கா கேஸ் சர்வீஸ் உரிமையாளர் சாமிவேலு ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகள் காமராஜர் வேடம் அணிந்து கவிதைகள் வாசித்தனர்.

Related Stories: