கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் ராணுவவீரர் மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து மர்மநபருக்கு வலை

திருவில்லிபுத்தூர், ஜூலை 18: திருவில்லிபுத்தூரில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ராணுவவீரர் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் மேட்டு நாயுடு தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், ராணுவ வீரர். இவரது மனைவி வினோஸ்ரீ (37). இவர், கடந்த 15ம் தேதி இரவு 7 மணியளவில் மண்டலம் சிவன்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது முனியாண்டி கோயில் அருகே, அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வினோஸ்ரீயின் முதுகில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அவரை அவதூறாக பேசி கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வினோஸ்ரீ சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவில்லிபுத்தூர் டவுன் சப்இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி வழக்குப்பதிந்து, தலைமறைவான மர்மநபரை தேடி வருகின்றனர்.

Related Stories: