கும்மிடிப்பூண்டி, ஜூலை 18: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேனகா, கௌரி, பிரவீன், ஆனந்தி, வெங்கடேசன் ஆகியோர் மாதர்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.இவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டனர். சூரப்பூண்டி அருகே சென்றபோது அது கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேனகா உள்ளிட்ட 5 மாணவிகளும் காயமடைந்தனர்.