திருத்தணி, ஜூலை 18: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வருகிற 24ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கோயில் தக்கார் ஆய்வு செய்தார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா வரும் 24ம் தேதி ஆடி அசுவினியுடன் தொடங்குகிறது. 25ம் தேதி ஆடிப் பரணி, 26ம் தேதி ஆடி கிருத்திகை ஆகிய விழாக்கள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 26ம் தேதி இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. முதல் நாள் திருவிழாவில், தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.