திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவம் நடைபெறுவதால், சந்திர கிரகணத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இன்று இரவு பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்ததாகும்.இந்நிலையில், இன்று நள்ளிரவு 1.32 மணி முதல் அதிகாலை 4.29 மணிவரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தில் சந்திர கிரகணம் அமைவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அண்ணாமலையார் கோயில் நடைதிறப்பு, தினசரி கால பூஜைகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.