கொடைக்கானல் சுற்றுலா வந்த இளம்பெண், வாலிபர் பலி

கொடைக்கானல், ஜூன் 26: திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் மகள் நாகஜோதி (24). இவரது தோழி ஒட்டன்சத்திரம் காந்திநகர் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த கனிவேல் மகள் உமாதேவி (23). இருவரும் தங்களது ஆண் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு டூவீலரில் கடந்த 22ம் தேதி சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். இதில் திண்டுக்கல் என்எஸ் நகரை சேர்ந்த பிரகாஷ் டூவீலரில் உமாதேவி வந்தார். மீனாட்சி ஊத்து சித்தரேவு சாலையில் 4வது வளைவில் வந்த போது எதிரே வந்த வாகனம் மோதாமல் இருக்க டூவீலரை திருப்பினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த உமாதேவி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மற்றொரு விபத்து

திருச்சியை சேர்ந்தவர்கள் அந்தோணி தேவதாஸ் மகன் அருண் (26), பேச்சிநாத பிள்ளை மகன் சக்தி (26), முத்தையா மகன் வினோத்குமார். நண்பர்களான 3 பேரும் டூவீலரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து விட்டு ஊருக்கு திரும்பினர். கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் மயிலாடும்பாறை அருகே வந்த போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சக்தி கொடைக்கானல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இரு விபத்துகள் குறித்தும் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

Related Stories: