கிணற்று தண்ணீரை பங்கிடுவதில் பிரச்னை பெண்ணை தாக்கிய விவசாயிக்கு வலைவீச்சு

பழநி, ஜூன் 26: பழநி அருகே கோட்டத்துறையில் கிணற்று தண்ணீரை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை தாக்கிய விவசாயியை தேடி வருகின்றனர். பழநி அருகே கோட்டத்துறையை சேர்ந்தவர் தொட்டியப்பன். இவர் வடமலைப்புதூரில் உள்ள ரத்தினசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த தோட்டத்தில் நீர்பாய்ச்சுவதற்கு பொதுக்கிணறு உள்ளது. இக்கிணத்திற்கு பாத்தியப்பட்ட ஆறுமுகம் (45) என்பவருக்கும், இவரது தொட்டியப்பன் மனைவி தொட்டிச்சி (54) என்பவருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆறுமுகம் கட்டையால் தொட்டிச்சியை தாக்கினார். இதில் கைமுறிந்து படுகாயமடைந்த தொட்டிச்சி சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தொட்டிச்சி கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: