ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் யோகா தின விழா நடந்தது. முதல்வர் பிரிட்டோ தலைமை வகிக்க, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் வரவேற்றார். விழாவில் யோகா செய்வதன் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது, தொடர்ந்து மாணவ, மாணவிகள் குழுவாக பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் விரிவுரையாளர்கள் ஆல்பர்ட் ஜேசுராஜ், சசிகலா, சதீஷ்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.